இந்தியாவின் முதல் தானியங்கி துறைமுகம்... இன்று விழிஞ்ஞத்தில் மோடி தொடங்கி வைப்பு!

கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞத்தில் அதானி குழுமத்துடன் இணைந்து சர்வதேச துறைமுகம் கட்டப்பட்டு வருகிறது.இந்த துறைமுகம் கடந்த வருடம் செயல்பாட்டுக்கு வந்த நிலையில் தற்போது இந்த துறைமுகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளில் இருந்தும் சரக்கு கப்பல்கள் இங்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்தலையில் விழிஞ்ஞம் துறைமுகத்தின் அதிகாரபூர்வ தொடக்க விழா இன்று நடைபெறுகிறது.
இந்த துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதற்காக பிரதமர் மோடி நேற்று மாலை 7.35 மணிக்கு திருவனந்தபுரம் வந்துள்ளார். தனி விமானம் மூலம் வந்த அவர் இரவு கவர்னர் மாளிகையில் தங்கியுள்ளார். இன்று காலை 11 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது. இதற்காக காலை காரில் விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டரில் விழிஞ்ஞம் செல்கிறார்.
விழாவுக்கு மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சார்பானந்த சோனாவால் தலைமை தாங்குகிறார். கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர், முதல்வர் பினராயி விஜயன் மற்றும் பலர் விழாவில் கலந்து கொள்கின்றனர். விழாவை முன்னிட்டு எம்எஸ்சி நிறுவனத்தின் மிகப்பெரிய சரக்கு கப்பலான செலஸ்டீனோ மரெஸ்கா விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு வந்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!