தென்காசி திருமலைக்குமாரசாமி கோவிலுக்கு வேல் காணிக்கையாக வழங்கிய மோகன்லால்!
May 30, 2025, 12:30 IST
தென்காசி மாவட்டம்கடையநல்லூர் அருகே பண்பொழி திருமலைக்குமாரசாமி கோவிலுக்கு நடிகர் மோகன்லால் செம்பு வேல் காணிக்கையாக வழங்கினார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பண்பொழி திருமலைக் குமாரசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நேற்று சாமி தரிசனம் செய்ய வந்தார். அவர் தனது வேண்டுதலுக்கு இணங்க கோவிலுக்கு செம்பு வேல் ஒன்றினை காணிக்கையாக வழங்கினார்.

அதன் பின்னர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஒரு குன்றின் மீது அமைந்துள்ள இந்த கோவிலின் இயற்கை அழகை ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
