”“பணம், பேர், புகழ் முக்கியமில்லை...” பா.ஜனதா மகளிர் அணி பொதுச்செயலாளர் தற்கொலை.. உருக்கமான கடிதம் சிக்கியது!

கர்நாடக மாநில பா. ஜனதா மகளிர் அணி பொதுச்செயலாளர் மஞ்சுளா திடீரென தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ள நிலையில், மஞ்சுளா எழுதியதாக கூறப்படும் உருக்கமான கடிதம் சிக்கியது
கர்நாடக மாநிலம் பெங்களூரு யஸ்வந்த்புரத்தை சேர்ந்தவர் மஞ்சுளா (42). இவர் கர்நாடக மாநிலம் பா.ஜனதா மகளிர் அணியின் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். கட்சி பணியில் மஞ்சுளா திறமையாக செயல்பட்டு வந்ததாக கூறப்படும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மஞ்சுளாவின் கணவர் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இதையடுத்து அவர் அதன் பின்னர் கட்சி பணியில் ஈடுபடாமல் மன அழுத்தம் காரணமாக விலகி இருந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்த மஞ்சுளா தூக்கிடு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து யஸ்வந்த்புரம் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மஞ்சுளாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எம்.எஸ்.ராமையா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், மஞ்சுளா கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் கிடைத்தது. அந்த கடிதத்தில், வாழ்க்கையில் பணம், பெயர், புகழ் ஆகியவை தான் முக்கியம் என்று நினைக்கிறோம். ஆனால் அது உண்மை இல்லை. நான் பணம், பெயர், புகழ் சம்பாதித்துவிட்டேன். ஆனால் நிம்மதி இல்லை.
கடந்த சில நாட்களாக நான் நிம்மதி இழந்து தவிக்கிறேன் எனது தற்கொலைக்கு வேறு யாரும் காரணம் இல்லை. எனது தற்கொலைக்கு நான் தான் காரணம்” என்று குறிப்பிட்டிருந்தார். அந்த கடித்தை கைப்பற்றிய போலீசார் அதை தடயவியல் ஆய்வு அறிக்கைக்காக அனுப்பி வைத்து விட்டு, இது குறித்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!