கலெக்டர் போல் பேசி பணமோசடி!! தட்டி தூக்கிய காவல்துறை!!

 
சந்தானபாரதி


புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சந்தான பாரதி (45), டாக்ஸி ஓட்டுநராக உள்ளார். இவர், பட்டுச்சேலை வாங்குவதற்காக காஞ்சிபுரத்திற்கு வந்துள்ளார். இந்த நிலையில், பட்டுச்சேலை கடையின் தொலைபேசியை தொடர்பு கொண்டு, குரல் மாற்று ஆப் மூலம் பெண் குரலில் பேசியுள்ளார். அந்த கடையின் உரிமையாளரிடம் மாவட்ட ஆட்சியர் பேசுவதாக அறிமுகம் செய்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளார். 

செல்போன் பலான படம் ஆபாசம் கற்பழிப்பு செக்ஸ்
எனினும், சந்தேகமடைந்த வரமகாலட்சுமி பட்டுசேலை கடையின் உரிமையாளர் கோபிநாத், காஞ்சிபுரம் எஸ்பி சுதாகரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், விசாரணை நடத்திய போலீசார் சிக்னல் மூலம் ஆய்வுசெய்து மோசடியில் ஈடுபட முயன்ற நபரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் போலீசார் அதிர்ச்சி அடையும் வகையில் மோசடி வலைகள் வெளிவந்தது. விசாரணையில், வாணியம்பாடி, திருப்பூர், ஈரோடு, ஊட்டி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு சென்றபோது, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் போன்று பேசி தொழிலதிபர்களை மிரட்டி, பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

கைது

அதேபோல், காஞ்சிபுரம் ஆட்சியர் பெண் என்பதால், குரல் மாற்று ஆப் மூலம் மாற்றிபேசி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.ஏற்கெனவே 4 மாவட்ட ஆட்சியர்களின் பெயர்களை பயன்படுத்தி, அங்குள்ள தொழிலதிபர்களிடம் பணம் பெற்று மோசடி செய்த நிலையில், காஞ்சிபுரத்தில் பணம் பெற மிரட்டல் விடுத்தபோது போலீசாரிடம் சிக்கியுள்ளார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web