200க்கும் மேற்பட்ட நாடகங்கள்.. பிரபல திரைக்கலைஞர் விக்ரமன் காலமானார்!

 
நாயர்

மேடை நாடகங்களில் ஆர்வமுடன் நடித்து வந்தவர். இதுவரையில் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ள பிரபல கலைஞர், நடிகர், நாடக ஆசிரியர் விக்ரமன் நாயர் சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார். திக்கொடியனின் ‘மகாபாரதம்’ நாடகத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான கேரள மாநில விருது பெற்றார். 

விக்ரமன்

இந்த நிலையில் அவர் தனது சொந்த ஊரில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். நீண்டகாலமாக உடல் நலக்குறைவு காரணமாக கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

கோழிக்கோடு குண்டுபரம்பா மாவட்டத்தைச் சேர்ந்த இவர், சாமோத்திரி குருவாயூரப்பன் கல்லூரியில் படித்தார். பின்னர் சொந்த நாடகக் குழுவான ஸ்டேஜ் இந்தியாவைத் தொடங்கினார். சங்கமம் என்ற நாடகக் குழுவின் ஒரு அங்கமாகவும் இருந்தார்.

விக்ரமன்

அவரது குறிப்பிடத்தக்க நாடகங்களில் ‘அக்ரஹாரம்’, ‘பொம்மகொலு’ மற்றும் ‘அம்பலகலா’ ஆகியவை அடங்கும். கேரளா சங்கீத நாடக அகாடமியின் மலையாள நாடகத்திற்கான அவரது பங்களிப்பிற்காக அவர் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web