9,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம்... 25 வருடங்களாக மைக்ரோசாஃப்ட் மேலாளராக இருந்தவரும் பணிநீக்கம்!
Jul 3, 2025, 17:25 IST

உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் 9,000-க்கும் மேற்பட்ட பணியாளா்களை நீக்க முடிவெடுத்துள்ளது. அதில் கடந்த 25 ஆண்டுகளாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மேலாளராக இருந்தவரும் ஒருவர் என்று தெரிய வந்துள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு பணி நீக்க நோட்டீஸை நேற்று முதல் அனுப்பி வருகிறது. இதில், அமெரிக்காவைச் சேர்ந்த மேலாளர் ஒருவரும் உள்ளார்.
அவர், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் தனது 25 ஆண்டுகால பணி நிறைவைக் கடந்த மாதம் சிறப்பாகக் கொண்டாடிய நிலையில், இன்று தனது பணி நீக்க நோட்டீஸை பெற்றிருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!