இன்று தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு!

 
பத்திரப்பதிவு
இன்று ஏப்ரல் 30ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சொந்தமாக வீடு, நிலம் வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருந்து வருகிறது.  அப்படி வாங்கும் சொத்துக்களை நல்ல நாளில், சுப முகூர்த்த நாளில் வாங்கவே விருப்பப்படுவார்கள். அந்த வகையில் முக்கிய விஷேச நாட்களில் பத்திர பதிவு அலுவலகத்தில் எப்போதும் இல்லாதை விட கூட்டம் அதிகமாக காணப்படும். இதன் காரணமாக நல்ல  நாளில் வாங்க நினைப்பவர்கள் ஏமாற்றம் அடையும் நிலை உருவாகும்.

இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பொதுமக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மங்களகரமான நாட்களாக  கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய நாட்களில்  பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

  நாளை பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள்!
சித்திரை மாதத்தின் மங்களகரமான தினமான இன்று ஏப்ரல் 30.04.2025 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. 

இதனை ஏற்று சித்திரை மாதத்தின் மங்களகரமான தினமான இன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும்

பத்திரப்பதிவு

100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web