பயங்கரம்!! 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்து தாயும் தற்கொலை !!

 
ரேணுகா

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மேல்புலம் கிராமத்தில் சங்கர் - ரேணுகா தம்பதி வசித்து வந்தனர். இதில் சங்கர் சென்னை கோயம்பேடு பகுதியில் சலூன் கடையில் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு சுருதிஹா (5), தீபக் (3) என இரண்டு குழந்தைகளும் இருந்தனர்.இந்த நிலையில் மதியம் 12.30 மணியளவில் கிராமத்தில் இருக்கும் அங்கன்வாடி மையத்தில் இருந்த தனது இரண்டு குழந்தைகளையும் தாய் ரேணுகா அழைத்து வந்துள்ளார். அதன் பின்னர் அவர்கள் மூவரும் நீண்ட நேரமாக வீட்டிற்கு வரவில்லை என தெரிகிறது. 

ரேணுகா

இதனிடையே, கிராமத்தின் வெளிப்பகுதியில் உள்ள கிணற்றில் மூன்று சடலங்கள் கிடப்பதை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் கலவை போலீசார் மற்றும்  தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு பெண் என மூன்று சடலங்களை மீட்டனர். 

ரேணுகா

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இறந்து கிடந்த தாய் மற்றும் இரண்டு குழந்தைகளை யாராவது கொலை செய்தார்களா? இல்லை கிணற்றில் தற்கொலை செய்து கொண்டார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் கிணற்றில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும்  ஏற்படுத்தி உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web