இன்ஸ்டா காதலனோடு தாய் ஓட்டம், குளத்தில் மிதந்த 2 வயது குழந்தை!!

 
ஜோதிகா

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம்  ஆதமங்கலம் பகுதியில் வசித்து வருபவர்  வெங்கடேஷ் . இவர்  பெங்களூருவில் பணிபுரிந்து  வருகிறார்.   இவர்  அதே பகுதியில் வசித்து வரும் ஜோதிகாவை காதலித்து வந்தார்.  இருவரும்  3 வருடங்களுக்கு முன்  திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் சோட்டு (எ) இசைத்தமிழன் என்ற ஆண் குழந்தை இருந்தது.  
கடந்த சில மாதங்களாக   ஜோதிகாவுக்கு ஃபேஸ்புக் மூலம் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் காமராஜ் நகரில் வசித்து வரும்  பரத்துடன்   பழக்கம் ஏற்பட்டது. பரத் கடலூரில் உள்ள ஒரு இரும்பு கடையில் பணிபுரிபவர்  . இவருடன் கடந்த 3 மாதங்களுக்கு முன் காதலாக மலர்ந்தது. ஃபேஸ்புக்கை தொடர்ந்து இருவரும் செல்போனில்  காதலலை தொடர்ந்து வந்தனர்.

குழந்தை உயிரிழப்பு


 அப்போது ஜோதிகா தனது திருமணத்தை மறைத்து பரத்திடம் இருவரும் திருமணம் செய்துகொண்டு சந்தோசமாக வாழலாம் எனக் கூறியுள்ளார்.  பரத் கடந்த மாதம் பெங்களூரு சென்று ஜோதிகாவை சந்தித்துள்ளார். அப்போது அவருடன் இருந்த குழந்தை குறித்து கேட்டபோது, அது தனது அக்கா குழந்தை.  அவர் இறந்து விட்டதால் தன்னுடன் இருப்பதாகவும், விரைவில் குழந்தையை தனது தாய் வீட்டில் விட்டு விடுவதாகவும் பரத்திடம் கூறியுள்ளார்.
இதை நம்பிய பரத், குழந்தையுடன் ஜோதிகாவை இலுப்பூர் அழைத்து வந்து திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் ஜோதிகாவுடன் இருந்த குழந்தையை   13-ம் தேதி திடீரென்று காணவில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது பரத் தம்பி ஜெயராஜ்  விளையாடுவதற்கு தூக்கி சென்றுவிட்டாதாக கூறியுள்ளார். தொடர்ந்து குடும்பத்தினர் இருவரையும் தேடியபோது வீட்டின் அருகே இருந்த  குளத்தில் இறந்த நிலையில் குழந்தை மிதந்தது. 

ஆம்புலன்ஸ்

தகவல் அறிந்து வந்த இலுப்பூர் போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் ஜோதிகா, பரத் மற்றும் அவரது தம்பி ஜெயராஜ் ஆகியோரிடம் விசாரனை நடத்தினர். இதில் ஜோதிகா குறித்த அனைத்து விவரங்களும் தெரிய வந்தது. அதனடிப்படையில் முதல் கணவர் வெங்கடேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் நேற்று இலுப்பூர் வரவழைக்கப்பட்டார்.

வெங்கடேஷ் மற்றும் பரத், ஜோதிகா, ஜெயராஜ் ஆகியோரிடம் போலீசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை எப்படி இறந்தது, குளத்தில் வீசி கொல்லப்பட்டதா என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web