மாமியாருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மருமகள்... பிறந்தநாள் பரிசாக 2 தங்க பிஸ்கட் , வைர நெக்லஸ், ரூ50 லட்சம் ரொக்கப்பணம்!

கோதாவரி மாவட்டத்தில் வசித்து வந்த சுகேஷ்க்கு அதே மாவட்டத்தைச் சேர்ந்த, ஸ்ரீரங்கநாயகியுடன் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜோலு நகரில் சுகேஷின் தாய் பவானிக்கு 50 வது பிறந்தநாள் வந்தது.
இதனை விமரிசையாக கொண்டாட தீர்மானித்தனர். அனைத்துப் பணிகளையும் முன் நின்று செய்த மருமகள், மாமியார் பவானிக்கு சிறப்பான வரவேற்பை அளித்தார். அதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிகளில் விலை உயர்ந்த பட்டுப்புடவைகள், தலா 100 கிராம் எடையுள்ள இரண்டு பிஸ்கட்டுகள், 28 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நெக்லஸ், 50 லட்சத்து 50 ஆயிரத்து 50 ரூபாய் பணம் அனைத்தையும் பரிசாக வழங்கினார்.
இவை மொத்தமாக ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருட்களை மாமியாருக்கு கொடுத்து மகிழ்வித்தார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!