இன்ப அதிர்ச்சி... மாமியாருக்கு பிறந்தநாள் வைர நெக்லஸ், 2 தங்க பிஸ்கட், ரூ.50 லட்சம் ரொக்கம் கொடுத்த மருமகள்!

மருமகளுக்கு மாமியார் செய்வது எல்லாம் பெரிய விஷயம் கிடையாது. மாமியாரின் பிறந்தநாள் விழாவில் மருமகள் கொடுத்த பரிசு குறித்து தான் சொந்த பந்தங்கள் மட்டுமின்றி அந்த பகுதி முழுக்கவே பரபரப்பாக பேசிக் கொண்டார்கள்.
கோதாவரி மாவட்டத்தைச் சேந்த சுகேஷ் என்பவருக்கு அதே மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீரங்கநாயகி என்பவருடன் இருவீட்டாரின் சம்மதத்துடன் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜோலு நகரில் சுகேஷின் தாய் பவானிக்கு 50வது பிறந்தநாள் வந்தது.
குடும்பத்தினர் அனைவரும் இதனை விமரிசையாக கொண்டாட தீர்மானித்தனர். அனைத்துப் பணிகளையும் முன் நின்று செய்த மருமகள், மாமியார் பவானிக்கு சிறப்பான வரவேற்பை அளித்தார்.
அதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிகளில் விலை உயர்ந்த பட்டுப்புடவைகள், தலா 100 கிராம் எடையுள்ள இரண்டு பிஸ்கட்டுகள், ரூ.28 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ், ரூ.50 லட்சத்து 50 ஆயிரத்து 50 ரூபாய் ரொக்கமாக பணம் என அனைத்தையும் தனது மாமியாருக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கி அசத்தினார்.
இப்படி மொத்தமாக ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருட்களை மாமியாருக்கு கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். 50வது பிறந்தநாளுக்கு வாழ்த்த வந்திருந்தவர்கள் ஆச்சர்யத்தில் உறைந்து போய் மாமியாரை வாழ்த்த வந்தவர்கள் அவரின் மருமகளை வாழ்த்திவிட்டு சென்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!