வாகன ஓட்டிகளே அலெர்ட்... எந்தெந்த வகையான விதிமீறலுக்கு அபராதம்... சென்னை காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!
சென்னையில் மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் விபத்துக்களும் அதிகரித்து வருகின்றன. போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை குறைக்கும் வகையில் சென்னையில் போக்குவரத்து காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை நடத்தப்பட்டு, விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஐந்து வகையான விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறைக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, `ஹெல்மெட்' அணியாமல் இருப்பது, நோ-என்ட்ரியில் வாகனம் ஓட்டுவது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணம் ஆகிய விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
