வீடு புகுந்து அதிமுக நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல்.. 82 சவரன் நகைகள், ரூபாய் 38 லட்சம் பணம் கொள்ளை!

 
புதுச்சேரி அதிமுக

புதுச்சேரி ரெயின்போ நகரை சேர்ந்த கருணாநிதி (57), என்பவர் அதிமுக நிர்வாகி ஆவார். புதுச்சேரியில் சொந்தமாக மதுபான கடை மற்றும் பஸ் டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் கருணாநிதி தனது வீட்டு வாசலில் நின்றிருந்தார்.

அப்போது அங்கு வந்த மூன்று பேர் கருணாநிதியிடம் ஏதே முகவரி கேட்பது போல் சென்று பேச்சு கொடுத்துள்ளனர். பின்னர் சில விநாடிகளிலேயே, அந்த மூவரும் கருணாநிதி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வீட்டிற்குள் அழைத்து சென்று ரூ. 10 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அதற்குள் வீட்டில் வேலை செய்யும் உறவுக்கார பெண் சந்தேகம் அடைந்து வீட்டின் கேட்டை பூட்டி உறவினர்களை அழைத்துள்ளார்.

கருணாநிதி

இதை அறிந்த மர்ம நபர்கள் கருணாநிதி அணிந்திருந்த செயின் மற்றும் பீரோவில் இருந்த 82 சவரன் தங்க நகைகள், ரூ. 38 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு தப்பியோடினர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து சென்ற பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து கைரேகை தடயங்களை சேகரித்தனர்.

மேலும் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், கோரிமேடு பகுதியில் மருத்துவ பிரதிநிதியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல் தான், கருணாநிதி வீட்டில் கொள்ளையடித்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, வழிப்பறியில் ஈடுப்பட்ட கும்பலை கைது செய்ய இரு தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

கருணாநிதி

இந்த கும்பல் சிறையில் இருந்து சமீபத்தில் தான் ஜாமினில் வெளியே வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக போலீசார் தீவிர வாகன  சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web