போதைக் காளானை சாப்பிட்டு நர்சிங் மாணவி பலி... பெரும் சோகம்!
கோயம்புத்தூரில் நர்சிங் பயின்று வந்த மாணவி நீலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), காதலன் ஆர்யனுடன் Ooty விடுதியில் தங்கியிருந்தபோது உயிரிழந்தார். இருவரும் மது அருந்தியதுடன், ‘மேஜிக் மஷ்ரூம்’ எனப்படும் போதை காளான்களையும் உட்கொண்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

நள்ளிரவில் நீலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அது சாதாரண மயக்கம் என கருதி ஆர்யன் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது. மறுநாள் காலை அசைவின்றி கிடந்ததை கண்டு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

உடற்கூறாய்வில் மதுவும் போதை காளானும் வினைபுரிந்து இதயத் துடிப்பு சீர்குலைந்ததே மரண காரணம் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஆர்யன் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
