நெகிழ்ச்சி... கருப்பர் கோயில் திருவிழாவில் பக்தர்களுக்கு பிரியாணி வழங்கிய இஸ்லாமியர்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற கருப்பர் கோயில். இந்த கோயிலின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டுதலுடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இந்த கருப்பர் கோயிலின் திருவிழாவை முன்னிட்டு ராசி பரூக் என்ற இஸ்லாமியர் ஒருவர் கடந்த ஒரு வார காலமாக பந்தல் ;அமைத்து நீர் மோர் வழங்கிவருகிறார். அந்த வகையில் இன்று கருப்பர் கோயில் திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு வெஜிடபிள் பிரியாணி வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.
இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வெஜிடேபிள் பிரியாணியை வாங்கி உண்டு மகிழ்ந்தனர். மேலும் கருப்பர் கோயில் திருவிழாவுக்கு இஸ்லாமியர்கள் வெஜிடபிள் பிரியாணி வழங்கிய நிகழ்வு இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கும் மத நல்லிணக்கத்திற்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!