இதைப் பார்க்காதீங்க... வாக்கிங் சென்றவரைக் கடித்தே கொன்ற தெருநாய்கள்.. பகீர் வீடியோ!
அண்மைக்காலமாக நாட்டின் பல்வேறு நகரங்களில் நாய்கள் கடித்து குதறியதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உயிரிழக்கும் நிகழ்வு அதிகரித்து வருகிறது. இதற்கு முடிவுகட்ட வேண்டும், நாய்கள் வளர்ப்பில் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் சுமார் பத்து நாய்கள் சேர்ந்து கடித்து குதறியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. உத்தரபிரதேசத்தின் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூங்கா ஒன்றில் முதியவர் இருந்துள்ளார். பூங்காவின் குறிப்பிட்ட இடத்தில் அவர் மட்டுமே இருந்துள்ளார்.
#Aligarh #DogMenance
— Dr. Sandeep Seth (@sandipseth) April 16, 2023
CCTV footage of the painful death of a person due to dog attack emerged.
More than half a dozen #dogs attacked a person in the Aligarh Muslim University campus of Thana Civil Line area of Aligarh, which killed the person on the spot. pic.twitter.com/5XedupSu90
இந்த நிலையில், அங்கு கூட்டமாக சுமார் பத்து நாய்கள் வந்து சூழ்ந்துள்ளது. அப்போது சிறிதும் எதிர்பாராத நேரத்தில் கூட்டமாக முதியவர் மீது பாய்ந்து அவரை கடித்து குதறியது. அவர் நீண்டநேரமாக போராடியும் நாய்களிடம் இருந்து தப்ப முடியவில்லை. இதனால் நாய்கள் அவரை விடாமல் கடித்து குதறிய நிலையில், ஒரு கட்டத்தில் அவர் இறந்துபோனார்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் நாய்கள் கூட்டத்தால் தாக்கப்பட்டு, நாய்கள் பூங்கா முழுவதும் அவரை இழுத்துச் சென்றது பதிவாகி இருந்தது. இது தொடர்பான பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!