மார்ச் 16ல் நாம் தமிழர் கட்சி சார்பில் பிரம்மாண்ட பேரணி!

 
 நாம் தமிழர் கட்சி சார்பில் பிரம்மாண்ட பேரணி
செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் வரும்  மார்ச் 16ம் தேதி  நாம் தமிழர் கட்சி சார்​பில், சாதி​வாரி கணக்​கெடுப்பை நடத்​தக்​கோரி பேரணி நடை​பெற உள்​ளது.

இது தொடர்​பாக அக்​கட்சி தலை​மையகம் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “தமிழகத்​தில் சாதி​வாரி கணக்​கெடுப்பை உடனடி​யாக நடத்​தி, உண்​மை​யான சமூகநீ​தியை நிலை​நாட்ட வேண்​டும்.

8.19% வாக்குகள்...  மாநில கட்சியாக அங்கீகாரம் பெறுகிறது நாம் தமிழர் கட்சி! 

பஞ்​சமி நிலங்​களை மீட்க வேண்​டும் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்​பில் பேரணி மற்​றும் பொதுக்​கூட்​டம் வரும் மார்ச் 16-ம் தேதி மாலை 4 மணிக்கு திருப்​போரூரில் நடை​பெறவுள்​ளது.

திருப்​போரூர் அம்​பேத்​கர் சிலை அருகே தொடங்​கும் இந்த பேரணியை நாம் தமிழர் கட்​சி​யுடன் கொங்கு மக்​கள் முன்​னணி, தமிழ்​நாடு நாடார் சங்​கம், இந்​திய தேசிய லீக் கட்​சி, புரட்​சித் தமிழகம் - பறையர் பேர​வை, சிறு​பான்மை மக்​கள் நலக்கட்​சி, தமிழர் மீட்​புக்​களம், தமிழர் தேசம் கட்சி ஆகிய​வற்​றின் தலை​வர்​களும் பங்​கேற்று நடத்​தவுள்​ளனர். நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் தலைமை வகிக்​க​வுள்​ளார்” என்று கூறப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web