மார்ச் 16ல் நாம் தமிழர் கட்சி சார்பில் பிரம்மாண்ட பேரணி!

இது தொடர்பாக அக்கட்சி தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி, உண்மையான சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்.
பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் வரும் மார்ச் 16-ம் தேதி மாலை 4 மணிக்கு திருப்போரூரில் நடைபெறவுள்ளது.
திருப்போரூர் அம்பேத்கர் சிலை அருகே தொடங்கும் இந்த பேரணியை நாம் தமிழர் கட்சியுடன் கொங்கு மக்கள் முன்னணி, தமிழ்நாடு நாடார் சங்கம், இந்திய தேசிய லீக் கட்சி, புரட்சித் தமிழகம் - பறையர் பேரவை, சிறுபான்மை மக்கள் நலக்கட்சி, தமிழர் மீட்புக்களம், தமிழர் தேசம் கட்சி ஆகியவற்றின் தலைவர்களும் பங்கேற்று நடத்தவுள்ளனர். நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகிக்கவுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!