நாகப்பட்டினம் – காங்கேசன் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்!
Mar 6, 2026, 19:20 IST
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன் துறைமுகத்திற்கான கப்பல் போக்குவரத்து இன்று (மார்ச் 06) முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு அளவு போன்ற விதிகளில் எந்த மாற்றமும் இல்லை.

பருவநிலை மாற்றம் ஏற்படும் நாட்களை தவிர, மற்ற நாட்களில் கப்பல் சேவை தொடர்ந்தே இயங்கும். செவ்வாய்க்கிழமை தவிர, வாரத்தின் மற்ற 6 நாட்களில் சேவை நடைபெறும்.

வரும் திங்கட்கிழமை, நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு புதிய கப்பல் வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கப்பலில் ஒரு நேரத்தில் 250 பேர் வரை பயணம் செய்ய முடியும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
