காவல்துறை அதிகாரியுடன் நிர்வாண வீடியோ காலில் பெண் தாதா.. சர்ச்சையைக் கிளப்பிய ஆடியோ!

 
லோகேஸ்வரி

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அருகே ஊராட்சி வார்டு உறுப்பினரும், திமுக வார்டு செயலாளராகவும் இருந்தவர் சதீஷ் (30). இவர் அப்பகுதியில் பல்வேறு சமூகபணிகளை செய்து வந்தார். சமூக விரோத செயல்கள், தவறுகளை தட்டிக்கேட்டு மக்கள் பணி செய்து வந்துள்ளார். 

மேலும் குற்றச்செயல்கள் குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அப்பகுதியில் பெண் ரவுடியான லோகேஸ்வரி குறித்த புகார்களை போலீசாருக்கு கொண்டு கொண்டுசென்றுள்ளார். லோகேஸ்வரி அந்த பகுதியில் விபச்சாரம், கள்ளச்சாராய விற்பனை உள்ளிட்ட தொழில் செய்துவந்துள்ளார்.  

இதனால் இவர் மீது காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தார். ஆனால் சில காவல்துறை அதிகாரிகள் லோகேஸ்வரிக்கு ஆதரவாக இருந்துள்ளனர். ஒருகட்டத்தில் குற்றம் அதிகமானதால் வேறுவழியின்றி உயரதிகாரிகள் நெருக்கடி காரணமாக உள்ளூர் காவல் அதிகாரிகள் லோகேஸ்வரி மீது நடவடிக்கை எடுத்தனர். இதனால் ஆவேசமடைந்த லோகேஸ்வரி, சதீஷை கொலை செய்தார்.

லோகேஸ்வரி

சதீஷின் தலையை துண்டாக வெட்டிவிட்டு, அந்த தலையை வீட்டின் வாசலில் கேட்டிற்கு வெளியே கொண்டு வந்து போட்டுவிட்டு, வீட்டையும் பூட்டி தலைமறைவானார். இதற்கு பிறகுதான் போலீசார் லோகேஸ்வரியை கைது செய்தனர். இவரும் திமுக முன்னாள் நிர்வாகியாவார். ஆனால் அவரது நடவடிக்கையால் தொடக்கத்திலேயே கட்சியில் இருந்து நீக்கிவிட்டனர்.

இப்போது லோகேஸ்வரி ஜாமீனில் உள்ளார். இவரது ஒரு ஆடியோ ஒன்று நேற்றைய தனம் இணையத்தில் வெளியானது. சோமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில், உளவுப் பிரிவை சேர்ந்த எஸ்ஐ மாதவன் என்பவருடன் யோகேஸ்வரி காதல் ரசத்துடன் பேசுவது அதில் பதிவாகியுள்ளது.

கொலை, வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சச்சினை யாராலும் பிடிக்க முடியாது என்று மாதவன், கொலைக்குற்றவாளி எஸ்தரிடம் ஆடியோவில் பேசுவது இடம்பெற்றிருந்தது. யோகேஸ்வரி மாதவனிடம் பேசும்போது, என்னைக்காவது அந்த ரவுடி சச்சின் பிடிபட்டுதான் ஆவான். சின்னாபின்னமாயிடுவான். கண்ணன்கிட்ட மாட்டினான்னா முடிஞ்சு போச்சு அவன் சோலி.

எப்படியாப்பட்டவங்களையும் பிடிப்பாரு அவர். என் உயிர் மாதிரி அவர். ஏன்னா இவன் சின்ன பையன். இவன் டீடெயில் அவருக்கு இன்னும் தெரியல என்கிறார் லோகேஸ்வரி.

லோகேஸ்வரி

அதற்கு மாதவன், அப்படி சொல்லாதே.. இவனை பிடிக்கவே முடியாது.. உனக்கு தெரியாது..ப்பா.. யாருக்கும் அனுபவம் இல்லைன்னு நாம சொல்லிட முடியாது. சில பேருக்கு சில டேலண்ட்கள் இருக்கும். நித்தியானந்தாவை இப்போ வரைக்கும் யாராவது பிடிக்க முடிஞ்சுதா? இத்தனைக்கும் அவர் ஒரு சாதாரண சாமியார்தானே, என்கிறார் மாதவன்.

உடனே லோகேஸ்வரி, அடடே நித்தியானந்தாவுக்கு சர்டிபிகேட் நீ தர்றே.. சரி, அதைவிடு.. என்னை நீ எவ்ளோ என்னை லவ் பண்றே சொல்லு? எவ்ளோ லவ் பண்றே? என்னை உனக்கு பிடிக்குமா? பிடிக்காதா? இப்போ உன் நினைப்புல நான் வந்துட்டேனா.. சொல்லு வந்துட்டேன்னு சொல்லு என்று ரொமாண்ட்டிக்காக யோகேஸ்வரி பேசியிருந்தார்.

அதுமட்டுமல்ல, நீ என்னிடம் வீடியோ கால் பேசும்போதெல்லாம், நீ உடலில் டிரஸ்ஸில்லாமல் இருக்கிறாய் என்று சொல்வதும், அதற்கு நீ வீடியோ காலில் என்னோடு பேசு, என்று மாதவன் சொல்வதும் அந்த ஆடியோவில் இடம்பெற்றிருந்தது. 

தற்போது காவல்துறை வட்டாரத்தில் இந்த ஆடியோ புயலை கிளப்பியுள்ளது. இப்போது உடனடியாக மாதவனை உளவுத்துறை பொறுப்பில் இருந்து நீக்கி, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளனர். எனினும் கொலை, கொள்ளை, சாராயவிற்பனை குற்றவாளியிடம் நெருக்கமாக இருக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

 

From around the web