சுதந்திரப் போராட்ட வீரர் நல்லகண்ணு காலமானார்… விடுதலைப் போராளிக்கு செவ்வணக்கம்... கனிமொழி எம்.பி!
சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ஆர். நல்லகண்ணு காலமானார். வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 15 நாட்களாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
விடுதலைப் போராட்டம் தொடங்கி, தீண்டாமை ஒழிப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு என சமூகச் சீர்திருத்த போராட்டங்களில் தன் வாழ்நாளெல்லாம் உழைக்கும் மக்களுடன் தோளோடு தோள் நின்ற முதுபெரும் பொதுவுடைமைப் போராளி - தகைசால் தமிழர் ஐயா நல்லக்கண்ணு அவர்களுக்கு செவ்வணக்கம்!
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) February 25, 2026
தியாகங்களும்… pic.twitter.com/ONSJcwG8C4
உடல்நிலை மோசமடைந்ததால் நேற்று மாலை முதல் செயற்கை சுவாச கருவி மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்களின் தீவிர முயற்சியையும் மீறி சற்றுமுன் உயிரிழந்தார். அவரது மறைவு அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாட்டாளி வர்க்க நலனுக்காக வாழ்நாள் முழுவதும் போராடியவர் நல்லகண்ணு. எளிமையும் கொள்கை உறுதியும் கொண்ட தலைவராக அறியப்பட்ட அவர், பல தலைமுறைகளுக்கு முன்னுதாரணமாக இருந்தார். அவரது மறைவுக்கு பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
