தேசிய சீனியர் கூடைப்பந்து.... தமிழகம் இறுதிப்போட்டிக்கு தகுதி!
தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில் 75-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் 7-வது நாளான நேற்று ஆண்கள் பிரிவு அரையிறுதி போட்டிகள் நடைபெற்றன. ரசிகர்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர்.
முதல் அரையிறுதியில் இந்தியன் ரெயில்வே அணி டெல்லியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான ஆட்டத்தில் ரெயில்வே 65-53 என்ற புள்ளி கணக்கில் டெல்லியை வீழ்த்தியது. இதன் மூலம் ரெயில்வே அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மற்றொரு அரையிறுதியில் நடப்பு சாம்பியன் தமிழ்நாடு, உத்தரபிரதேசத்தை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தமிழ்நாடு 102-53 என்ற புள்ளி கணக்கில் எளிதாக வெற்றி பெற்றது. இதனால் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு – ரெயில்வே அணிகள் மோத உள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
