நாளை ஏப்.25 முதல் மே 30 வரை நாடு தழுவிய போராட்டம்... காங்கிரஸ் அறிவிப்பு!

முன்னதாக டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இந்தப் பொதுக்கூட்டத்தில், அரசியலமைப்பைக் காப்பாற்ற வலியுறுத்தி, நாளை ஏப்ரல் 25 முதல் மே 30 ஆம் தேதிவரையில் நாடுதழுவிய போராட்டம் நடத்தவிருப்பதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களுடன் பேசுகையில், “அரசியலமைப்பைக் காப்பாற்றும் போராட்டம் ஏப்ரல் 25 முதல் ஏப்ரல் 30 வரையில் பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி அளவிலும், மே 3 முதல் மே 10 வரையில் மாவட்ட அளவிலும், மே 11 முதல் மே 17 வரையில் நாடு முழுவதும் 4,500 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நடைபெறும். தொடர்ந்து, மே 20 முதல் மே 30 வரையில் வீட்டுக்குவீடு பிரசாரமும் நடத்தப்படும்.
காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக அமலாக்க இயக்குநரகத்தை மத்திய பாஜக அரசு தவறாகப் பயன்படுத்துகிறது. இது, அரசியல் பழிவாங்கும் வழக்கே. மேலும், இது ஒரு சட்டரீதியிலான பிரச்னை அல்ல; இது, ஓர் அரசியல் துன்புறுத்தல், அச்சத்தைத் தூண்டும் அரசியல் பிரச்னை.
நேஷனல் ஹெரால்டு பற்றிய பாஜகவின் தவறான தகவலை எதிர்கொள்ளும்வகையில், ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 24 வரையில் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் காங்கிரஸ் தலைவர்கள் செய்தியாளர் சந்திப்புகளை நடத்துவார்கள்.
காங்கிரஸ் கட்சியின் கவனம் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதியின் மீதுதான் இருக்கும். நாடு முழுவதும் சாதி கணக்கெடுப்பு, தனியார் கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் பிரச்னை, இடஒதுக்கீட்டின் மீதான 50 சதவிகித உச்சவரம்பை நீக்க வேண்டும், விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி முதலான கட்சியின் கோரிக்கைகளும் இன்றைய கூட்டத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது” என்று தெரிவித்தார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!