4 நக்சலைட்டுகள் ஆயுதங்களுடன் சரண்!
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 2 பெண்கள் உள்பட 4 நக்சலைட்டுகள் இன்று தங்களது ஆயுதங்களுடன் போலீசில் சரணடைந்தனர். இவர்கள் தெற்கு பஸ்தர் பிரிவின் கிஸ்தாரம் பகுதி குழுவைச் சேர்ந்தவர்கள். மாநில அரசின் ‘பூனா மார்கம்’ புனர்வாழ்வு திட்டத்தின் கீழ் அவர்கள் சரணடைந்ததாக காவல்துறை தெரிவித்தது.

சரணடைந்த நக்சலைட்டுகள், அரசின் சரணடைதல் மற்றும் மறுவாழ்வு கொள்கையால் ஈர்க்கப்பட்டதாக கூறியுள்ளனர். தொடர்ந்து வனப்பகுதிகளில் வாழ்ந்த சிரமமும், வளர்ச்சி திட்டங்கள் குறித்து கிடைத்த விழிப்புணர்வும் இந்த முடிவுக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.

சரணடைந்தவர்களில் சோதி ஜோகா குறித்து தகவல் வழங்க ரூ.5 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. டபார் கங்கா மாட்கம் கங்கா, சோதி ராஜே, மாட்வி புதாரி ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் நக்சலைட் பகுதிகளில் அமைதிக்கான நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
