காஞ்சிபுரத்தில் நயன்தாரா... திடீரென திரண்ட ரசிகர்களால் பரபரப்பு!
’டெஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகை நயன்தாரா காஞ்சிபுரம் வந்திருந்த நிலையில், நடிகை நயன்தாராவை நேரில் காணும் ஆவலில் திடீரென படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தயாரிப்பாளர் சஷிகாந்த் இயக்குநராக அவதாரம் எடுக்கும் படம் ‘டெஸ்ட்’. இதில் நடிகர்கள் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் உள்ளிட்டப் பலர் நடிக்கின்றனர். இதில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா நடிக்கிறார்.
She has the most beautiful walking style ever ! 👌♥️
— Ever & Forever for Nayan 👀💫❤️ (@SathsaraniSew) January 7, 2024
The energy & confident she holds ! 🔥
LADYSUPERSTAR #Nayanthara in Kanchipuram for #theTEST movie shooting at today ! 🎬 pic.twitter.com/Zy7lxpWx4A
இதன் படப்பிடிப்பிற்காக காஞ்சிபுரத்தில் உள்ள ஜூரகரேஸ்வரர் கோயிலில் நயன்தாரா கலந்து கொண்டார். இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வரும் நிலையில், நயன்தாரா வந்திருப்பதை அறிந்த அங்கிருந்த ரசிகர்கள் அவரைப் பார்க்க கோயில் முன்பாக கூடினர்.
இதனால், அங்கு சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரசிகர்களைப் பார்த்து கையசைத்து விட்டு காவல்துறை உதவியோடு நடிகை நயன்தாரா கேரவனுக்குக் கிளம்பிச் சென்றார். இந்த காணொலி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாதவன் ஜோடியாக நயன்தாரா நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!