மகன்களின் பெயரை அறிவித்தார் நயன்தாரா? அட இப்படியெல்லாமா பேரு வைப்பாங்க... ரசிகர்கள் அதிர்ச்சி!

 
நயன்தாரா

தமிழகத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியது இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாரா திருமணம். திருமணம் ஆன நான்கே மாதத்தில், வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றதை அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார் நயன்தாரா. அதன்பிறகு குழந்தையின் முகத்தை வெளியிடாமல், இரு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை இருவரும் வெளியிட்டு வந்தனர்.   

நயன்தாரா

சில காலம் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்துவந்த நயன்தாரா, தற்போது இயக்குனர் அட்லி, ஷாருக்கானை வைத்து இயக்கி வரும், 'ஜவான்' படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படபிடிப்பு சமீபத்தில் கலந்து கொண்ட போது, குழந்தைகளுடன் நயன்தாரா ஏர்போர்ட் வந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

நயன்தாரா

இந்நிலையில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை நயன்தாரா, முதல் முறையாக தன்னுடைய இரட்டை குழந்தைகளின் பெயர்களை அறிவித்துள்ளார். இவர்களின் பெயர்கள் யாரும் எதிர்பாராத விதத்தில் மிகவும் வித்தியாசமானதாகவே உள்ளது. அதன்படி ஒரு மகனுக்கு 'உயிர் ருத்ரேனில் என் சிவன்' என்றும் மற்றொரு பிள்ளைக்கு 'உலக தெய்வேக் என் சிவன்' என்றும் பெயர் சூட்டியுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web