கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு புது கேப்டன்!
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச்31ம் தேதி அகமதாபாத்தில் தொடங்கப்பட உள்ளது. பிரம்மாண்ட தொடக்க விழாவுடன் ஆரம்பமாகும் இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஐதரபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உட்பட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் மார்ச் 31ம் தேதி நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி , தோனி தலைமையிலான சென்னை அணியை எதிர்கொள்கிறது.
ஐபிஎல் தொடரில் வெற்றி அணி அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் முதுகு தண்டில் ஏற்பட்ட கடும் வலி காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டன் யார்? என்பதில் குழப்பம் நிலவி வந்தது.
இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் புதிய கேப்டனாக நிதிஷ் ரானா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஸ்ரேயாஸ் முதுகு வலியில் இருந்து திரும்பி வரும் வரை அவருக்கு பதில் நிதிஷ் ரானா கொல்கத்தா கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் குணமடைந்து நடப்பு ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் விளையாட வாய்ப்பு இருப்பதாகவும் கொல்கத்தா அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டுக்கு பதில் டேவிட் வார்னர் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!