3,5,8ம் வகுப்புக்களில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் ஃபெயில்... புதிய விதிமுறைகள் அமல்!

தேசிய கல்வித் திட்டத்தின் அடிப்படையில் சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் 3,5,8ம் வகுப்புகளில் கட்டாய தேர்ச்சி முறை அமலில் இருந்தது. இந்த முறை மாற்றப்பட்டு, தேசிய கல்விக் கொள்கையின்படி விதிகள் திருத்தப்பட்டது. அதன்படி சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்பில் இனி 30% குறைவாக மதிப்பெண் எடுத்தால் பெயில் என அறிவிக்கப்படும் நடைமுறை அமலுக்கு வருகிறது.
8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற நடைமுறையை கல்வியாண்டு முதல் சிபிஎஸ் மாற்றுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதால் இனிவரும் ஆண்டு முதல் அமல் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் முடிவதற்கு முன்பே 9ம் வகுப்பு வரை விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, பழைய விதிமுறைப்படி மாணவர்கள் அடுத்த வகுப்புக்குச் சென்று விட்டனர். இதனையடுத்து இந்த முறை அடுத்த ஆண்டில் இருந்துதான் முழுமையாக நடைமுறைக்கு வரும் என ஆசிரியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். புதிய தேசிய கல்விக் கொள்கை 2020ன் படி இந்த நடைமுறை அமலுக்கு வர உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!