புதிய புயல் சின்னம்... தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!
வங்கக்கடலில் தொடர்ச்சியாக உருவாகும் காற்றழுத்த தாழ்வுகள் காரணமாக தென் இந்தியாவில் மழை நிலை மேலும் தீவிரமாகும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் இன்று நவம்பர் 27ம் தேதி புதிதாக மற்றொரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்து வரும் 6 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தென்மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், ஏக்கர் கணக்கில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனர்.

இந்நிலையில் புதிய புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் 6 நாட்களுக்கு பல இடங்களில் கனமழை தொடரும் வாய்ப்பு அதிகம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
