புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கைது... 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள் தர்ணா... !
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் சென்னையில் அருந்ததியர் உள்இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டத்தில் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற தொண்டர்களை கைது செய்ததை எதிர்த்து, கொட்டும் மழையில் சாலையில் படுத்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தர்ணாவில் ஈடுபட்டார்.

தொடர்ந்து அருந்ததியினருக்கு வழங்கப்பட்ட 3% உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சித்தார். இதன் பேரில் கிருஷ்ணசாமியை போலீசார் கைது செய்தனர். அவருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சித் தொண்டர்கள் 100க்கும் மேற்பட்டோரும் கைது செய்யப்பட்டனர்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
