அடுத்தடுத்த அதிர்ச்சி... ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து! 3 பேர் படுகாயம்!

 
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து

சமீபகாலமாக இந்தியாவில் ராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்து அடுத்தடுத்து நடந்து மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது. தற்போது கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடலோர காவல் படைக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில்  அந்த ஹெலிகாப்டர் கிழே விழுந்ததில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ராணுவ  ஹெலிகாப்டர் விபத்து

இதனையடுத்து இன்று  கேரளாவின் கொச்சி விமான நிலையத்தின் ஓடுபாதை  மூடப்பட்டது. மேலும், விபத்து நடந்த உடனேயே, விபத்து நடந்த இடத்தில் ஆய்வுக்காக விமான நிலைய ஓடுபாதை மூடப்பட்டது. இதனால் இரண்டு சர்வதேச விமானங்கள் திருவனந்தபுரத்திற்கு திருப்பி விடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த ஹெலிகாப்டர் 25 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்தபோது திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால்  தரையிறக்கி கொண்டே அதனை சரிசெய்ய தொடங்கினர்.

ஹெலிகாப்டர்

அப்போதே எதிர்பாராதவிதமாக   ஹெலிஹாப்ட்டர் விழுந்து நொறுங்கியது. இந்திய கடலோர காவல்படையின் ஏஎல்எச் துருவ் மார்க் 3 ஹெலிகாப்டர்  கட்டாயமாக தரையிறங்க வேண்டிய போது ஹெலிகாப்டர் சுமார் 25 அடி உயரத்தில் இருந்தது. ALH துருவ் கடற்படையின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கு இந்திய கடலோர காவல்படை செயல்பட்டு வருகிறது' என இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web