நள்ளிரவில் பாகிஸ்தானுக்கு அடுத்த அதிர்ச்சி... திடீர் நிலநடுக்கத்தால் கதறும் மக்கள்!

பாகிஸ்தானில் இன்று அதிகாலை 1.44 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது மக்களை பதற்றமும், அதிர்ச்சியும் அடைய செய்துள்ளது.
பயங்கரவாதிகள் மீதான இந்தியாவின் அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து அடாவடியாக பாகிஸ்தான், இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்த முயற்சித்து வருகிறது. பாகிஸ்தானின் அத்துமீறலை இந்திய ராணுவம் தனது வான்பாதுகாப்பு அமைப்பு மூலம் வெற்றிகரமாக முறியடித்தது.
இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியது. இந்த நிலையில் பாகிஸ்தானில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 1.44 மணியளவில் (ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 29.67 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 66.10 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!