அடுத்த அதிர்ச்சி... பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 சவரன் நகைகள் கொள்ளை.. வீட்டு வேலைக்காரர் மீது போலீசில் புகார்!

 
விஜய் யேசுதாஸ் ஐஸ்வர்யா

இது நடிக, நடிகர்களின் வீட்டில் திருடு போகும் காலம் போல. நடிகர் ரஜினிகாந்த் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா  வீட்டில் தங்க, வைர நகைகள் கொள்ளைப் போனதாகவும், வீட்டில் வேலைச் செய்பவர்களின் மீது சந்தேகம் இருப்பதாகவும் புகாரளித்த நிலையில், போலீசார், வீட்டின் வேலைக்காரி திருடியதைக் கண்டுப்பிடித்து, நகைகளை மீட்டு கைது செய்தனர்.

இந்நிலையில், பிரபல திரைப்பட பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டிலும் 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மனைவியும், தனக்கு வீட்டு வேலைச் செய்பவர்களின் மீது சந்தேகம் இருப்பதாக புகார் தெரிவித்துள்ளார். முன்னதாக ரஜினி மகள் 60 சவரன் நகைகள் திருடு போனதாக புகாரளித்த நிலையில், போலீசார் 103 சவரன் நகைகளை மீட்டனர். மேலும் திருடிய நகைகளை விற்று, ரூ.95 லட்சத்துக்கு தனி வீடு கட்டி வாடகைக்கு விட்டதும், மகளுக்கு திருமணம், கணவருக்கு காய்கறி கடை, இன்னொரு மகளுக்கு மளிகை கடை என செலவழித்ததும் தெரிய வந்துள்ளது. தற்போது ஐஸ்வர்யா ரஜினி, அதிக நகைகள் திருடு போனதாக கூறி புதிய புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

இந்நிலையில், பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸின் இரண்டாவது மகன் விஜய் யேசுதாஸின் வீட்டிலும் திருடு போயுள்ளது. மாரி படத்தில் வில்லனாகவும் நடித்துள்ள சிஜய் யேசுதாஸ் சென்னை ஆழ்வார்ப்பேட்டை அபிராமபுரம் 3வது தெரு பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் விஜய் யேசுதாஸின் மனைவி தர்சனா வீட்டில் வைத்திருந்த 60 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் காணவில்லை என அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ம் தேதி வீட்டின் லாக்கரில் வைத்திருந்த சுமார் 60 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் இருந்ததாகவும், கடந்த மாதம் 18-ம் தேதி நகைகளை எடுக்க சென்ற போது லாக்கரில் வைத்திருந்த நகைகள் காணாமல் போனதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

Vijay Jesudas

காணாமல் போன நகைகள் குறித்து பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் நேற்று (மார்ச் 30) காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் வீட்டில் வேலை செய்யும் மேனகா, பெருமாள், சையத் ஆகியோர்கள் மீது சந்தேகம் இருப்பதாக கூறி பாடகர் விஜயின் மனைவி தர்ஷனா புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அபிராமபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைரேகை நிபுணர்களை அழைத்து சென்று விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் சந்தேகம் உள்ளதாக கூறப்பட்ட பணியாளர்களை அழைத்து விசாரணை செய்து வருவதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

ஐஸ்வர்யா ரஜினி

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் 200 சவரன் நகைகள் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டு வீட்டின் பணியாளர் மற்றும் கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது திரைப்பட பாடகர் வீட்டில் திருடு போயிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web