அடுத்த சோகம்.. சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. தரைமட்டமான கட்டிடங்கள்!

 
மாரியப்பன்

தமிழகத்தில் அண்மைக்காலமாக பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் நடந்த வண்னம் உள்ளன. சமீபத்தில் காஞ்சிபுரத்தில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 9 பேர் பலியாகினர். கடலூர், சேலம், சிவகாசி என பல இடங்களில் பட்டாசு விபத்துகள் ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழக்கும் நிகழ்வு கலங்கவைக்கிறது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த மாரியப்பன்(54) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒத்தையால் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் திடீரென பெரும் வெடிவிபத்து ஏற்பட்டது.

மாரியப்பன்

இந்த பகுதியில் லேசான மழை பெய்துள்ளது. இதில் சல்பர் வைக்கப்பட்டிருந்த அறையில் மழைநீர் பட்டதால் வெடித்து சிதறியது. இந்த வெடி விபத்தில் மூன்று அறைகள் தரைமட்டம் ஆகின. மேலும் தொடர்ந்து பட்டாசுகள் பலத்த சட்டத்துடன் வெடித்துக் கொண்டே இருந்தன. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இந்த வெடி விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு தொழிற்சாலையில் பணிகள் ஏதும் நடைபெறாததால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. பயங்கர சத்தத்துடன் பட்டாசு ஆலை வெடித்து சிதறிய சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சம் அடைந்தனர்.

மாரியப்பன்

விசாரணையில், மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்று செயல்பட்டு வரும் இந்த பட்டாசு ஆலையில் 10-க்கு மேற்பட்ட அறைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன. இந்த ஆலையின் உரிமத்திற்கான தேதி நிறைவு பெற்றதால் மீண்டும் புதுப்பிக்க பதிவு செய்துள்ளனர். இதனால் கடந்த 10 நாட்களாக இந்த ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெறவில்லை. ஆனால் ஆலையில் ஒரு அறையில் மட்டும் பட்டாசுக்கு தேவையான மூலப்பொருளான சல்பர் அதிக அளவில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த விபத்தில் அந்த அறையும் இடிந்து தரைமட்டமானது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web