இன்று நிர்மலா சீதாராமன் இங்கிலாந்து, ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம்!

 
நிர்மலா சீதாராமன்
  

இந்தியா – இங்கிலாந்து நாடுகளிடையேயான பொருளாதாரம், நிதி குறித்த அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்கிறார். இங்கிலாந்து, ஆஸ்திரியா நாடுகளைச் சேர்ந்த சிந்தனையாளர்கள், முதலீட்டாளர்கள், வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

நிர்மலா
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏப்ரல் 8ம் தேதி முதல் 13ம் தேதி வரை இவ்விரு நாடுகளிலும் அரசுமுறை பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா-இங்கிலாந்து நாடுகளிடையேயான பொருளாதாரம், நிதி குறித்த  ஆலோசனைக் கூட்டம் ஏப்ரல் 9ம் தேதி லண்டனில் நடைபெற உள்ளது. இவ்விரு நாடுகளின் நிதியமைச்சர்கள் தலைமையில் இந்த 13வது சுற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த இருநாடுகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நிலையிலான கூட்டங்களில் பணிக்குழுக்கள், முதலீடுகள், நிதிசார் சேவைகள், நிதி நடவடிக்கைகளுக்கான விதிமுறைகள் ஒருங்கிணைந்த பண பரிவர்த்தனை செயலி வாயிலாக மேற்கொள்ளப்படும் நிதிசார் பரிவர்த்தனைகள், வரி விதிப்பு, சட்ட விரோத பண பரிவர்த்தனைகள் உட்பட  பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

நிர்மலா சீதாராமன்

தனது இங்கிலாந்து பயணத்தில் ஓய்வூதிய நிதிகள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கிகள், நிதிச் சேவை நிறுவனங்கள் உட்பட அனைத்து  அம்சங்கள் குறித்தும் சர்வதேச அமைப்புகளின் தலைமை நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில் நடைபெறும் இந்தியா-இங்கிலாந்து முதலீட்டாளர் வட்டமேஜை மாநாட்டிலும் நிதியமைச்சர் உரை நிகழ்த்துகிறார்.  தனது பயணத்தின் 2வது கட்டமாக ஆஸ்திரியா செல்லும் நிதியமைச்சர், மார்கஸ் மார்டர்பவர் உட்பட மூத்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் எனக்  கூறப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web