பகீர் மோசடி... அமேசான் காட்டையே விலைக்கு வாங்கிய நித்யானந்தா!

 
நித்யானந்தா

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட  நித்யானந்தா பாலியல் குற்றச்சாட்டு காரணமாக   2019ல்  நாட்டை விட்டே  தப்பி ஓடினார்.  தற்போது கைலாசா என்ற ஒரு தனி நாட்டை உருவாக்கியிருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டு அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். நித்தியானந்தா மீது  ஏராளமான பாலியல் புகார் இருக்கும் நிலையில் இந்தியாவால் தேடப்படும் ஒரு முக்கிய குற்றவாளியாக இருந்து வருகிறார்.  

நித்யானந்தா

இந்நிலையில் நித்தியானந்தா மீது தற்போது உலக அளவில் மிகப்பெரிய மோசடி குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது. அதன்படி  பொலிவியா நாட்டைச் சேர்ந்த அமேசான் காடுகளில் வசிக்கும் 3 பழங்குடியின மக்களிடம் 1000 ஆண்டுகளுக்கு ஒரு நில ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியுள்ளார். அந்த நிலம்  டெல்லியை விட 2.5 மடங்கு, மும்பைக்கு 6.5 மடங்கு, பெங்களூருவுக்கு 5.3 மடங்கு, கொல்கத்தாவை விட 19 மடங்கு பெரியதாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த நில ஒப்பந்தத்திற்கு வருடத்திற்கு இந்திய மதிப்பில் 8.96 லட்சம் ரூபாய் கொடுப்பதாக நித்தியானந்தா  கையெழுத்து போட்டு வாங்கியுள்ளார். அந்த ஒப்பந்தத்தின் படி அந்த நிலத்தில் உள்ள இயற்கை வளங்கள் அனைத்தும் கைலாசா நாட்டிற்கே சொந்தமானது என நித்தியானந்தா கூறியுள்ள நிலையில் இந்த மோசடி பொலிவியா நாட்டிற்கு தெரியவந்தது.

 நித்யானந்தா

உடனடியாக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு அந்த ஒப்பந்தம் சட்டப்படி செல்லாது என அறிவித்துள்ளது. அத்துடன்  அமேசான் காடுகளில் உள்ள நிலங்களை வெளிநாட்டவர் எந்த விதத்திலும் வாங்க முடியாது எனவும் இது ஒரு கற்பனை ஒப்பந்தம் எனவும் பழங்குடியின அமைப்பினர் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த மோசடி தற்போது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?