தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று இல்லை... சுகாதாரத்துறை தகவல்!
2020ல் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கொரோனா தற்போது மீண்டும் வேகமெடுத்து பரவ தொடங்கியுள்ளது. அந்த வகையில் சிங்கப்பூர் உட்பட பல வெளிநாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவி வருகிறது. தமிழகம், கேரளா உட்பட தென் மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தனியார் மருத்துவமனைகளில் அறிகுறிகளின் அடிப்படையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதையடுத்து ஏப்ரல் மாதத்தில் தொற்றுக்கு உள்ளானவர்களின் சளி மாதிரிகளை சேகரித்து பகுப்பாய்வுக்காக புனேவில் உள்ள மரபணு பரிசோதனை கூடத்துக்கு பொது சுகாதாரத்துறை அனுப்பியது. அதன் முடிவுகள் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் புதிய வகை பாதிப்பு எதுவும் அவர்களுக்கு இல்லை என்பது உறுதியானதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் “ஏப்ரல் மாதம் அனுப்பப்பட்ட மாதிரிகளை மரபணு பகுப்பாய்வு செய்ததில் அவை அனைத்துமே ஒமைக்ரான் வகை தொற்றுதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் உட்பிரிவுகளாக பிஏ-2, ஜெஎன்-1 உள்ளிட்ட வகை பாதிப்புகளே கண்டறியப்பட்டுள்ளன. எனவே, தமிழகத்தில் தற்போது பரவி வருவது புதிய வகை தொற்று பாதிப்பு இல்லை.

புதிய வகை கொரோனா பரவியிருந்தால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் தீவிரம் அதிகரித்திருக்கும். உயிரிழப்புகளும் பதிவாகியிருக்கும். ஆனால், அத்தகையை சூழல் ஏதும் தமிழகத்தில் நிகழவில்லை. எனவே, பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் தற்போது ஏற்படவில்லை. அதே நேரத்தில் இணை நோயாளிகள், குழந்தைகள், முதியவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
