தமிழக சுற்றுலா பயணிகள் யாரும் வராதீங்க... கேரளா பரபரப்பு அறிவிப்பு!

தமிழக கேரள எல்லைப் பகுதியில் ஆரியங்காவு அருகே பாலருவி நீர்வீழ்ச்சிஉள்ளது. இந்த அருவிக்கு வருடம் முழுவதுமே கேரளா மக்களை காட்டிலும் தமிழக சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் பலர் இந்த அருவிக்கு சென்று வருவர். தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக வெயில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து விட்டது.
இதன் காரணமாக நாளை ஏப்ரல் 29ம் தேதி முதல் பாலருவி மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டு இருப்பதாக கேரள வனத்துறையினர் அறிவித்துள்ளனர். எனவே தமிழகத்தில் இருந்து, தமிழக சுற்றுலா பயணிகள் மறு அறிவிப்பு வரும் வரை பாலருவி நீர்வீழ்ச்சிக்கு வர வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!