சென்னையில் நோக்கியா ரூ. 270 கோடி முதலீடு; 200 வேலைவாய்ப்புகள் !
சென்னையில் நோக்கியா நிறுவனம் முதற்கட்டமாக ரூ. 270 கோடி முதலீடு செய்யவிருப்பதாக வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார். இது நிலையான நெட்வொர்க்குகள் மற்றும் தொலைத்தொடர்பு ஆராய்ச்சி, மேம்பாட்டுக்கான புதிய வசதிகளுக்காக அமைக்கப்படும்.
சென்னை சிப்காட் சிறுசேரியில் நோக்கியா தனது புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை திறந்து வைத்துள்ளது. இந்த புதிய மையத்தின் மூலம் மாநிலத்திற்கு 200 வேலைவாய்ப்புகள் உருவாகும். நோக்கியா, தமிழ்நாட்டில் முக்கியமான ஆராய்ச்சி முதலீட்டாளர்களில் ஒருவர். 1997 ஆம் ஆண்டில் நிறுவனம் 1,000 பொறியாளர்களை பணியமர்த்தியுள்ளது.
முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த விரிவாக்கம் தொடங்குகிறது. திட்டத்தின் முதல் கட்டம் ரூ. 270 கோடி முதலீடு கொண்டு செயல்படும்; இரண்டாவது கட்டத்தில் சுமார் ரூ. 300 கோடி முதலீடு இருக்கும் என்று தகவல் தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
