கோவிலில் வரிசையில் நின்றிருந்த வடமாநில பக்தர் மயங்கி சரிந்து பலி... திருச்செந்தூரை தொடர்ந்து ராமேஸ்வரத்தில் அடுத்தடுத்து சோகம்!

 
 ராமேஸ்வரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில்  உலகப்பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.  இங்கு சாமி தரிசனத்துக்காக வரிசையில் நின்றிருந்த ராஜஸ்தானை சேர்ந்த ராஜ்தாஸ் என்ற பக்தர் மயங்கி விழுந்து உயிரிழந்தார் இந்த கோவில் பரிகாரத் தலமாக இருப்பதால்  தினமும்  தமிழகம்,  வடமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

ராமேஸ்வரம்

இந்நிலையில் இன்று காலை ராஜஸ்தானை சேர்ந்த ராஜ்தாஸ் என்பவர் ராமநாத சுவாமியை தரிசனம் செய்வதற்கு வரிசையில் நின்று கொண்டிருந்தார்.அப்போது கூட்ட நெரிசல் காரணமாக அவர் திடீரென  மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு  கோயிலில் உள்ள முதலுதவி மையத்தில் சிகிச்சை அளித்தனர். 

ராமேஸ்வரம்

அங்குள்ள மருத்துவர்கள் ஏற்கனவே  உயிரிழந்ததாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ராமேஸ்வர அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூட்ட நெரிசலில் பக்தர் உயிரிழந்தது  பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?