4 நாள் கூட தாங்காது... ராணுவ வாகனங்களுக்கு டீசல் கூட இல்லாத பாகிஸ்தான்!

 
இந்தியா பாகிஸ்தான்

கடந்த ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீரில் நடத்தப்பட்ட தீவிரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து இருநாட்டு எல்லையில் போர்ப்பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான், தற்போது தன் வரலாற்றிலேயே காணாத அளவுக்கு பாதுகாப்பு நெருக்கடியில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்திடம் வெறும் 96 மணி நேரம்   போரை தாங்கும் அளவிலேயே வெடிமருந்துகள் இருப்பதாக ராணுவத் தரப்பிலிருந்து வந்துள்ள தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.  

மோடி பாகிஸ்தான்

M109 ஹோவிட்சர்கள், BM-21 ராக்கெட் லாஞ்சர்கள், SH-15 துப்பாக்கிகள் உள்ளிட்ட முக்கிய ஆயுதங்களுக்கே தற்போது வெடிமருந்துகள் கிடைக்கவில்லை. ராணுவ வாகனங்களுக்கு டீசல் இல்லை, பயிற்சிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதனைப்பொறுத்தவரை பாகிஸ்தான் இராணுவம் தற்போது தோல்விக்கே நெருங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக  உளவுத்துறைகள்  தெரிவித்துள்ளன.

இந்த நெருக்கடியை உருவாக்கிய முக்கிய காரணங்களில் ஒன்று, பாகிஸ்தானின் உள்நாட்டு பொருளாதார வீழ்ச்சி. அதிகமான வெளிநாட்டு கடன்கள், பணவீக்கம் மற்றும் அந்நிய செலாவணியின் நாசம் ஆகியவை, இராணுவத்துக்கும் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. மேலும், உக்ரைனுக்கு ஆயுத ஏற்றுமதி செய்ததும், நாட்டின் பாதுகாப்பு கையிருப்புகளை வெறுமனே ஆக்கியிருப்பதாகவும்  விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

பாகிஸ்தான்

இந்தியா உட்பட  பாதுகாப்பு வல்லுநர்கள்,  “இந்திய ராணுவத்தின் முன்னிலையில் பாகிஸ்தானின் வலிமை மிகவும் குறைவானது. தரைவழிப் போர்களில் இந்தியா வெற்றியை எளிதில் நிலைநாட்டும்” என்கின்றனர்.  இந்திய ராணுவத்திடம் 1000க்கும் மேற்பட்ட T-90, T-72 மற்றும் அர்ஜுன் டாங்கிகள் வைக்கப்பட்டுள்ளன. இது பாகிஸ்தானின் 350 VT-4 டாங்கிகளை ஒப்பிடும்போது மிகப்பெரிய வலிமை என கூறப்படுகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு ரீதியாக மிகப் பெரிய இடர்பாட்டை எதிர்கொள்ள இருப்பதாக என்பது உறுதி.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

கடந்த ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீரில் நடத்தப்பட்ட தீவிரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து இருநாட்டு எல்லையில் போர்ப்பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான், தற்போது தன் வரலாற்றிலேயே காணாத அளவுக்கு பாதுகாப்பு நெருக்கடியில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்திடம் வெறும் 96 மணி நேரம்   போரை தாங்கும் அளவிலேயே வெடிமருந்துகள் இருப்பதாக ராணுவத் தரப்பிலிருந்து வந்துள்ள தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.  

மோடி பாகிஸ்தான்

M109 ஹோவிட்சர்கள், BM-21 ராக்கெட் லாஞ்சர்கள், SH-15 துப்பாக்கிகள் உள்ளிட்ட முக்கிய ஆயுதங்களுக்கே தற்போது வெடிமருந்துகள் கிடைக்கவில்லை. ராணுவ வாகனங்களுக்கு டீசல் இல்லை, பயிற்சிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதனைப்பொறுத்தவரை பாகிஸ்தான் இராணுவம் தற்போது தோல்விக்கே நெருங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக  உளவுத்துறைகள்  தெரிவித்துள்ளன.

இந்த நெருக்கடியை உருவாக்கிய முக்கிய காரணங்களில் ஒன்று, பாகிஸ்தானின் உள்நாட்டு பொருளாதார வீழ்ச்சி. அதிகமான வெளிநாட்டு கடன்கள், பணவீக்கம் மற்றும் அந்நிய செலாவணியின் நாசம் ஆகியவை, இராணுவத்துக்கும் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. மேலும், உக்ரைனுக்கு ஆயுத ஏற்றுமதி செய்ததும், நாட்டின் பாதுகாப்பு கையிருப்புகளை வெறுமனே ஆக்கியிருப்பதாகவும்  விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

பாகிஸ்தான்

இந்தியா உட்பட  பாதுகாப்பு வல்லுநர்கள்,  “இந்திய ராணுவத்தின் முன்னிலையில் பாகிஸ்தானின் வலிமை மிகவும் குறைவானது. தரைவழிப் போர்களில் இந்தியா வெற்றியை எளிதில் நிலைநாட்டும்” என்கின்றனர்.  இந்திய ராணுவத்திடம் 1000க்கும் மேற்பட்ட T-90, T-72 மற்றும் அர்ஜுன் டாங்கிகள் வைக்கப்பட்டுள்ளன. இது பாகிஸ்தானின் 350 VT-4 டாங்கிகளை ஒப்பிடும்போது மிகப்பெரிய வலிமை என கூறப்படுகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு ரீதியாக மிகப் பெரிய இடர்பாட்டை எதிர்கொள்ள இருப்பதாக என்பது உறுதி.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web