ஒரு வாரம் விடுமுறை அளித்த பள்ளிக்கு நோட்டீஸ்!! அதிரடி!!

 
ஊட்டி பள்ளி

நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் செயல்பட்டு வரும் தனியார்  பள்ளியில் தேசிய அளவிலான ஆர்.எஸ்.எஸ். உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பகவத் தலைமையில் இக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

ஊட்டி பள்ளி

கடந்த திங்கட்கிழமை  முதல்  நாளை வரை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.பள்ளியில்  இந்த கூட்டம் நடைபெறுவதால் தனியார் பள்ளிக்கு ஒரு வார காலம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கு தனியார் பள்ளி நிர்வாகம் முறையான அனுமதி பெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஊட்டி பள்ளி

இது குறித்து   உரிய விளக்கமளிக்க  வேண்டும் என சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திற்கு மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது குறித்து தகுந்த விளக்கமளிக்காவிட்டால் பள்ளி நிர்வாகத்தின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web