நெட்பிளிக்ஸ், யூடியூப் நிறுவனங்களுக்கு பறந்த நோட்டீஸ்…. உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

உச்சநீதிமன்றத்தில் இன்று நெட்பிளிக்ஸ் யூடியூப் வலைதளங்களில் ஆபாச வீடியோக்கள் ஒளிபரப்பு குறித்து கட்டுப்பாட்டு விதிக்கும் வழக்கு விசாரணைக்கு வந்தது. இது குறித்து நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் ஆகஸ்டின் ஜார்ஜ் மசீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. ஓடிடி மற்றும் சமூக ஊடக தளங்களில் ஆபாசமான உள்ளடக்கங்களை ஒளிபரப்புவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
Supreme Court issues notice to Centre, Netflix, Amazon Prime, Ullu, ALTT, X (formerly Twitter), Facebook, Instagram, YouTube and others on a PIL seeking direction to Centre to take appropriate steps to prohibit the streaming of obscene content on OTT and social media platforms. pic.twitter.com/wM32jlkqye
— ANI (@ANI) April 28, 2025
இந்த பொதுநல மனு அடிப்படையில் உச்ச நீதிமன்றம் மத்திய அரசு மற்றும் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், உல்லு, ஏஎல்டிடி, எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்), ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில் உச்சநீதிமன்ற அமர்வு இந்தியாவில் இது மிக மிக முக்கியமான பிரச்சினை. இதுபோன்ற விவகாரங்களில் நிர்வாகம் மற்றும் சட்டமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இது குறித்து மத்திய அரசின் சட்ட உதவியாளர் துஷார் மேத்தா, தற்போது சில கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதாகவும், கூடுதல் நடவடிக்கைகள் பரிசீலிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். மனுதாரர்கள், தேசிய உள்ளடக்கக் கட்டுப்பாட்டு ஆணையம் அமைக்கப்பட்டு, ஆபாச உள்ளடக்கங்களை தடுக்கும் விதிகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!