ஆசிரியர் பணிக்கான கலந்தாய்வு நடைபெறும் தேதி அறிவிப்பு!!

 
ஆசிரியர்கள்

தமிழகத்தில்  அனைத்து வகுப்புக்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் நடத்தி  முடிக்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள் தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் நேரத்தில்  ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படும். அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.  

ஆசிரியர்கள் கூட்டம் பெண்கள்

அந்த வகையில் நடப்பாண்டுக்கான  ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 8ம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இறுதி நேரத்தில்  நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மாறுதல் கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வியின் ஒட்டுமொத்த கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

ஆசிரியர்கள்

இந்நிலையில், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பொது மாறுதல் கலந்தாய்வு மே 15 முதல் 26ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் புதிய தேதி அறிவிக்கப்பட்டு இருப்பது ஆசிரியர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web