இனி இந்தியாவை பாரத்ன்னு கூப்பிடுங்க... ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் சர்ச்சை பேச்சு!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் நம்முடைய நாட்டின் பெயரை இந்தியா என அழைக்கக்கூடாது. நம் நாட்டை ‘பாரத்’ என்று தான் கூற வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்தியா என்பது ஆங்கில பெயராகும் எனக் கூறியுள்ளார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நம்முடைய நாட்டின் பெயர் பாரத் என்றால் இந்திய அரசியலமைப்பு, இந்திய ரிசர்வ் வங்கி போன்ற நிறுவனங்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் போது வழங்கப்பட்ட காலனித்துவ பேரான இந்தியாவை இன்னும் ஏன் பயன்படுத்துகிறார்கள்.
இதை நாம் மாற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார். 2024 ல் மக்களவைத் தேர்தலின் போது, எதிர்க்கட்சிகள் தங்களது கூட்டணி பெயரை இந்தியா என வைத்துக் கொண்டனர். இதையடுத்து இந்தியா Vs பாரத் என்ற சர்ச்சை வெடித்தது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!