பகீர் வீடியோ!! அரை நிர்வாணமாக பெண்மணியை ஓட ஓட விரட்டிய அரசு அதிகாரிகள்!

 
மூதாட்டி

மத்திய பிரதேசத்தின் கிழக்கு பகுதி நகரமான சாகர் பகுதியில் பட்டியலின மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அங்குள்ள ஒரு சிறிய வீட்டில் வயதான பெண்மணி ஒருவர் தனியாக வசித்து வருகிறார். அவரது வீட்டுக்கு 19 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்ததாக கூறப்படுகிறது. இந்த தொகையை அவர் கட்டாததால் மின்வாரிய ஊழியர்கள் பெண்மணியின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

அவர்கள் நேராக வீட்டுக்குள் புகுந்து, அந்த பெண்ணின் வீட்டில் இருந்த கட்டில் உள்ளிட்ட பொருட்களை தடாலடியாக பறிமுதல் செய்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் பெண்மணி  வீட்டின் குளியலறையில் இருந்திருக்கிறார். அப்போதும் மின் வாரிய ஊழியர்களை தடுக்க முயற்சித்திருக்கிறார். 


ஆனால் விடாப்பிடியாக பொருட்களை எடுத்துச் சென்றதால் அரை நிர்வாணத்தில் அந்த பெண்மணி அவர்களை பின் தொடர்ந்து செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டார். இது தொடர்பான வீடியோ பரவியது. இதனையடுத்து மின்வாரிய அதிகாரிகளின் இந்த அநாகரிக போக்குக்கு அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

 இதனையடுத்து, சம்பந்தப்பட்ட மின் வாரிய ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள மாநில மின்சாரத்துறை அமைச்சர் பிரதுமான் சிங் தோமர் உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி அதிகாரிகள் சஸ்பென்ட் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மூதாட்டி

மேலும் அந்த வீட்டில் அந்த பெண் மட்டும் தனியாக வசித்து வருகிறார். அவர் தங்கியுள்ள வீட்டின் மின்சார இணைப்பு அவரின் மருமகளின் பெயரில் இருந்ததால் அவருக்கு தெரியவில்லை. ஆகையால் பறிமுதல் செய்யப்பட்ட வீட்டின் பொருட்கள் அனைத்தும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டு விட்டதாக மின்வாரியத்துறை அதிகாரி விளக்கம் கொடுத்துள்ளனர்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web