சோதனையிட்ட அதிகாரிகள் ஷாக்... உணவில் ஈ , கொசுக்கள்... கடும் எச்சரிக்கை !

 
சோதனையிட்ட அதிகாரிகள் ஷாக்... உணவில் ஈ , கொசுக்கள்... கடும் எச்சரிக்கை !

தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தில் மாதப்பூர் மற்றும் கச்சிப்போல் பகுதியில் சிறப்பு டாக்ஸ் ஃபோர்ஸ் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

 

அந்த வகையில் கச்சிப்போல் பகுதியில் உள்ள வரலட்சுமி டிபன் சென்டரில் ஆய்வு நடத்திய போது அங்கு தரை வெடிப்புகள் மற்றும் உணவுப் பொருட்கள் நேரடியாக சாக்கடையில் வீசப்பட்டதால் அதனை உண்பதற்காக வந்த காகங்கள்,  சாக்கடையில் தண்ணீர் தேங்கிய நிலையில் சுகாதாரமற்ற மிகவும் மோசமான விளைவுகள் காணப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

 

க்ஷத்திரியா ஃபுட்ஸ் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட போது காய்கறி வெட்டும் இடத்தில் ஈக்கள் அதிகமாக காணப்பட்டதாகவும், அங்குள்ள சிம்னி மற்றும் உடைந்த டைல்ஸ், குளிர்சாதன பெட்டியில் ஒன்றாக வைக்கப்பட்டிருந்த சைவ மற்றும் அசைவ உணவுகள், ரத்தம் உறைந்த நிலையில் அசைவ உணவுகள் மற்றும் அடையாளமின்றி வைக்க வைக்கப்பட்டிருந்த இறைச்சிகள் இவைகளையும் சுட்டிக்காட்டினார்.

 

அத்துடன்  உணவுப் பொருள்களில் சுத்தமில்லாத செயற்கை நிறங்களை கண்டறிந்த அதிகாரிகள் அங்கு பூச்சி கட்டுப்பாட்டு அறிக்கைகள், மருத்துவ சான்றிதழ்கள் மற்றும் நீர் சோதனை அறிக்கைகள் ஆகியவை இல்லாததையும் உறுதி செய்தனர். இந்த சுகாதாரமற்ற முறையில் உணவகம் நடத்தும் இந்த மாதிரியான உணவகங்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?