அட கொடுமையே... காதலனின் தந்தையுடன் ஓட்டம் பிடித்த காதலி... கதறியழுத காதலன்!
காதலுக்கு கண்ணில்லை என்று கூறுவார்கள்.. ஆனால் இந்த காதலுக்கு என்ன தேவை இருக்கிறது என்று கேள்வி கேட்கும் அளவுக்கு ஒரு விசித்திரமான காதல் கதை உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. கான்பூரில் அமித் என்ற 20 வயது இளைஞர் அதேபகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அமித் தனது தந்தை கம்லேஷ்குமார் உடன் கட்டிட தொழில் செய்துவந்துள்ளார். அமித் தனது காதலியை வீட்டுக்கு அழைத்துவந்து தந்தையிடம் அறிமுகம் செய்துள்ளளார்.
இந்த பெண்ணை தான் காதலிப்பதாகவும், இவரை தான் திருமணம் செய்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார். வழக்கம்போல் தந்தை வீட்டில் எதிர்ப்பு இல்லை. இதனால் காதலர்கள் உற்சாகத்தில் இருந்தனர். ஒன்றாக பல இடங்களுக்கு சுற்றி காதல் செய்து வந்தனர். அதன் பின்னர் அந்த இளம்பெண் அடிக்கடி அமித்தின் வீட்டிற்கு வந்து சென்று உள்ளார்.
அப்போது அமித்தின் தந்தை கமலேஷ் குமாருடன் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நெருக்கமானது. இதனையடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் அந்த இளம்பெண், தனது காதலனின் தந்தை கமலேஷ் உடன் ஓட்டம் பிடித்தார்.
ஆனால் இளம்பெண் எங்கு சென்றார், என்ன ஆனார் என தெரியாமல் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்படி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்தபோது தான் காதலனின் தந்தையுடன் ஓடியது தெரிய வந்தது. பின்னர் இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர்.
ஓராண்டு விசாரணை மேற்கொண்ட போலீசார் தற்போது இரண்டு பேரையும் டெல்லியில் கண்டு பிடித்து கைது செய்தனர். கமலேஷ் மற்றும் இளம்பெண் இரண்டு பேரும் கணவன், மனைவியாக ஒன்றாக வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது. கமலேஷ் போலீஸ் காவலில் உள்ள நிலையில், அப்பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. கமலேஷ் உடன்தான் வாழ விரும்புவதாக இளம்பெண் போலீசார் கூறியுள்ளார். இதனால் பெண்ணின் வீட்டார், காதலன் இருவரும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!