சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்க தினம் ஒரு செவ்வாழை... !

 
செவ்வாழை

எந்த பழத்தை சாப்பிட்டாலும் சத்துக்கள் சேரும் தான் . ஆனால் சமீபகாலமாக வெளிநாட்டு பழங்களை விரும்பி சாப்பிடுவதில் தான் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். வீட்டிற்கு அருகிலேயே வருடம் முழுவதும் கிடைக்கும் வாழைப்பழங்களை பொதுவாக யாரும் வாங்கி சாப்பிடுவதே இல்லை. சீசன் பழங்களையும் வாழைப்பழத்தையும் சாப்பிட்டாலே  உடலுக்கு தேவையான அனைத்து விட்டமின்களும் வந்து சேரும்.  அதிலும் பூவன் ,கற்பூரவல்லி என  மஞ்சள் நிற வாழைப்பழங்களைத் தான் வாங்கி சாப்பிடுவோம்.  மஞ்சள் நிற வாழைப்பழங்களை விட, செவ்வாழை மிகவும் ருசியாகவும் இருக்கும். உடலுக்கு ஆரோக்கியமும் மேம்படும். 

செவ்வாழை

செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் 'சி' அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது. செவ்வாழையில் உள்ள நார்ச்சத்து  செரிமான   பிரச்சனைகளை நீக்கி  மலச்சிக்கல், வாய்வு தொல்லை, செரிமான பிரச்சனைகளை தடுக்கிறது.  செவ்வாழையில் நிறைந்துள்ள  பொட்டாசியம் தான் சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கும்.
 
செவ்வாழையில் உள்ள கால்சியம்  குழந்தைகளின்  குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.  மற்ற பழங்களை விட செவ்வாழையில் கலோரிகள் குறைவு. ஆகவே இதனை தினமும் ஒன்று சாப்பிட்டாலே போதும்.  உடல் எடை கட்டுகோப்பாக இருக்கும்.  இதனை உட்கொண்டால், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்படலாம்.  
செவ்வாழை  உடலில் சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவும் வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளை அதிகரிக்கிறது.  ரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரித்து, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

நெஞ்செரிச்சல்
  அதிகப்படியான உடல் சூடு, நாள்பட்ட மலச்சிக்கல் மற்றும் முறையற்ற குடலியக்கத்தால் உருவாகும் பிரச்சனைகளை தடுக்க  தினமும் ஒரு செவ்வாழையை சாப்பிடலாம்.   அல்சர் இருப்பவர்கள், செவ்வாழையை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால், அசிடிட்டியின் அளவு குறைந்து, வயிற்றில் எரிச்சல் ஏற்படுவது தணிக்கப்படும்.  கண்ணில் நீர்வழிதல், கண்ணில் எரிச்சல், கண்களுக்கு அதிக வேலை தருவது, என எந்த கண்பாதிப்பு இருந்தாலும், செவ்வாழை சாப்பிட்டு வந்தாலே போதும்.. அல்லது இந்த பழத்தை துண்டு செய்து, கண்களின் மேல் சிறிது நேரம் வைத்தால், கண் எரிச்சலும், கண்ணில் நீர் வழிதலும் உடனே நின்றுவிடும்.  
 48 நாள் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கான நரம்புகள் பலம்பெற்று, ஆண்மைக்கோளாறுகள் நீங்கிவிடும்.  செவ்வாழைப்பழம் சாப்பிடுவதற்கான சரியான நேரம் காலை 6 மணி,  பகல் 11 மணி,  அல்லது மாலை 4 மணி சாப்பிடலாம். காரணம், சாப்பிட்டதுமே செவ்வாழையை சாப்பிட்டால் மந்தநிலை உருவாவது போல் இருக்கும்.  இதனுடைய முழு சத்துகளும் நமக்குக் கிடைக்க இந்த நேரங்களில் சாப்பிடுவது நல்லது.  

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web