தேசிய பாதுகாப்பு நிதிக்கு ஒரு மாத எம்.பி. சம்பளத்தை வழங்க இளையராஜா முடிவு!

 
பிரதமர் மோடி - இளையராஜா

இந்தியாவில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு  பதிலடி கொடுக்கும் வகையில்   ஆபரேஷன் சிந்தூர் மூலம்  தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. 

இளையராஜா

இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதனையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைப் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. 

இளையராஜா

இந்நிலையில் ஒரு மாத எம்.பி. சம்பளத்தை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்க முடிவு செய்திருப்பதாக  இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். மேலும் அதில் நமது துணிச்சலான வீரர்கள் எதிரிகளை மண்டியிட வைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது, தீவிரவாதத்தை ஒழிக்க எனது இசை நிகழ்ச்சி கட்டணத்தையும் வழங்கவுள்ளேன் என இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார். இவரது அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web