கட்சியில் நிர்வாகிகளை நியமிக்கவோ, நீக்கவோ எனக்கு மட்டுமே முழு அதிகாரம் உள்ளது... ராமதாஸ் ஆவேசம்!

 
ராமதாஸ்
 


பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர் அன்புமணி ராமதாசுக்கு  அதிகாரம் இல்லை என ஜூலை 2, 2025 அன்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.   “கட்சியில் நிர்வாகிகளை நியமிக்கவோ, நீக்கவோ எனக்கு மட்டுமே முழு அதிகாரம் உள்ளது. அருள் பாமகவின் கொறடாவாகத் தொடர்ந்து பணியாற்றுவார்,” எனக் கூறியுள்ளார்.  
இந்த அறிவிப்பு, ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு இன்னும் தொடர்வதை காட்டுகிறது. அன்புமணி, அருளை கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, ஜூலை 2, 2025 அன்று கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட  அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக அறிவித்திருந்தார்.

அன்புமணி,  ராமதாஸ்

இதற்கு பதில் அளித்த அருள், “35 ஆண்டுகளாக ராமதாசுடன் பயணித்து வருகிறேன். என்னை இணை பொதுச் செயலாளராக நியமித்தவர் ராமதாஸ். அன்புமணிக்கு என்னை நீக்கும் அதிகாரம் இல்லை,” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அருள் மேலும், ராமதாஸே கட்சியின் முழு அதிகாரம் படைத்த தலைவர் எனவும்  அன்புமணி வெறும் செயல் தலைவர் மட்டுமே எனவும் வலியுறுத்தினார்.

 பரபர... ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு..  தொடர்ந்த ஆடிட்டர் குருமூர்த்தி ... தைலாபுரம் தோட்டத்து ரகசியங்கள்!

இந்த மோதல், பாமகவை இரு அணிகளாகப் பிளவுபடுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது. ராமதாஸ் தனது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த ஜூலை 10 ம் தேதி  கும்பகோணத்தில் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். ஒரு பக்கம் அன்புமணி கட்சி நிர்வாகிகளை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். இந்நிலையில், மற்றொரு பக்கம் ராமதாஸ் தனக்கு தான் கட்சியில் முழு அதிகாரம் என தெரிவித்து வருவது பாமக தொண்டர்களுக்கு மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது